Pages

Sunday, August 19, 2012

கட்-ஆஃப் மதிப்பெண் உயர்வு: பிரதமர் கவலை


தொழில் நுட்ப படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர்வு கவலை அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஆண்டு தோறும் பல மாணவர்கள் ஐஐடியில் சேர விண்ணப்பிக்கும் நிலையில், மிகக் குறைந்தளவு மாணவர்களுக்கே வாய்ப்பு அளிப்பது மன வேதனையாக இருப்பதாக குறிப்பிட்டார். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வியில் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment