Pages

Tuesday, August 07, 2012

பள்ளி வாகனங்களில் கூடுதல் மாணவர்களை அனுமதிக்க கோரிக்கை-07-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, அதிகமான நபர்களை பள்ளி வாகனங்களில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அதற்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம், நேற்று நடந்தது. இதில், தமிழக உள்துறைச் செயலர் ராஜகோபாலை சந்தித்து, தனியார் பள்ளி வாகன கட்டணம் உயர்வு, பள்ளி வாகனங்களுக்கான நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவது உட்பட சில கோரிக்கைகளை மனுவாக அளிக்க, முடிவு செய்தனர். அதன்படி, தலைமை செயலகத்தில், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், தங்களுக்கான வாகன வரியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்காமல், ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த அனுமதிக்க வேண்டும்; பள்ளி வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான, "12+1&' என்பதை,"20+1&' என்ற அளவிற்கு நபர்களை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தி உள்

No comments:

Post a Comment