Pages

Sunday, August 26, 2012

2ம் கட்ட தேசிய வங்கி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம


Institute Of Finance, Banking and Insurance-ன் சார்பில் தேசிய வங்கி நுழைவுத் தேர்வு 2-வது கட்டமாக நடைபெற உள்ளது. ஐ.எப்.பி.ஐ. நடத்தும் இந்த நுழைவுத்தேர்வை எழுதுபவர்கள் வங்கியியல் பிரிவில் முதுநிலை பயில தகுதி உடையவர் ஆவார்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். முதுநிலை வங்கியியல் படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்களுக்கு இந்தியாவில் உள்ள முன்னனி வங்கிகளில் IFBI வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும். இதற்கு பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு பட்டப்படிப்பை படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்று, 1987 ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 30ம் தேதி வரை இணையதளத்தில் தேர்வு நடைபெறுகிறது. கூடுதல் விபரங்களை www.ifbi.com என்ற இணையதளத்தில் பெறலாம். அல்லது 1800-266-8000 என்ற தொலைபேசி எண்ணில் தகவல்களை பெறலாம். « முதல் பக்கம்

No comments:

Post a Comment