இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 22, 2015

மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்

மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ''யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவதோயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில், யோகா கலையை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பாடத் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டில்லியில் நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இனி, யோகா கட்டாய பாடமாக்கப்படும். 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். இந்த பாடத்துக்கு, 100 மார்க்குகள் வழங்கப்படும்.

இதில், 80 மார்க், பல்வேறு ஆசனங்களை செய்வதற்கான, செய்முறை பயிற்சிக்காக வழங்கப்படும். மீதமுள்ள, 20 மார்க், கேள்வி - பதில்களுக்காக (தியரி) வழங்கப்படும். இந்த பாடம், மாணவர்களுக்கு கூடுதல் பாடச் சுமையாக இருக்காது. 'கணிதம், அறிவியல், வணிகம் போல், இது, மற்றொரு பாடமாக இருக்குமோ' என, மாணவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் சந்தோஷமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், பள்ளியில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் யோகா போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

ஆசிரியர் பயிற்சி மையங்களிலும், யோகா கட்டாய பாடமாக்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், யோகா பயிற்சியாளர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்படும். இதனால் தான், ஆசிரியர் பயற்சி மையங்களிலும் யோகாவை, ஒரு பாடமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகா பாடங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், அடுத்த மாதம், 17 முதல், 'மொபைல் ஆப்' மூலமாக, 'டவுண்லோட்' செய்யலாம்.

* 'நடப்பு கல்வி ஆண்டிலேயே, மத்திய அரசு பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படுமா' என்பது குறித்து, அரசு தரப்பில் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை.

* யோகா குறித்த சில பாடப் புத்தகங்கள் நேற்று வெளியிடப்பட்டாலும், மேலும் பல புத்தகங்கள் தற்போது தான், அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

* 'நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு விட்டன. இதனால், இந்த கல்வியாண்டில் யோகா பாடம் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு' என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*''மாநில அரசு பள்ளிகளில் யோகா பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்,'' என, அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

*இதனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*'பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாவதால், எதிர்காலத்தில் யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

*யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும், டிசம்பரில், டில்லி, 'கன்னாட் பிளேஸ்' பகுதியில், நாடு முழுவதும் இருந்து வரும் மாணவர்களால்,'கலா உத்சவ்' என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்படும்.

Sunday, June 21, 2015

பி.எட் படிப்புக்கு 742 கல்லூரிகளுக்கு அனுமதி

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான புதிய பாடத்திட்டப்படி, ஜூலை முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியராக, பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக, எம்.எட்., படிக்க வேண்டும். தமிழகத்தில், ஓராண்டு பி.எட்., படிப்பு அமலில் உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., மற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலையான - என்.சி.டி.இ., இணைந்து, பி.எட்., படிப்பு தொடர்பாக, 2014ல், மத்திய அரசு அனுமதியுடன் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளன.

இந்த விதிகளின் படி, பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கல்வியியல் தனியார் கல்லுாரிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.ஆனால், 'வரும் கல்வியாண்டில், இரண்டு ஆண்டு பட்டப் படிப்பை அமல்படுத்த வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, என்.சி.டி.இ., அதிரடியாக அறிவித்தது. இதனால், இரண்டு ஆண்டு பட்டப் படிப்பை அமல்படுத்த, தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகள், என்.சி.டி.இ.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளன.

புதிய விதிகளின்படி, வரும் கல்வியாண்டில், தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு, 723 கல்லுாரிகள்; உடற்கல்வி பயிற்சியான பி.பி.எட்., படிப்புக்கு, 19 கல்லுாரிகள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. எம்.எட்., படிப்புக்கு, 140 கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதுச்சேரியில் பி.எட்., படிப்புக்கு, 25; எம்.எட்., படிப்புக்கு, ஐந்து கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும், வரும் கல்வி ஆண்டு முதல், இரண்டு ஆண்டு பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான அரசாணை யில், 'ஜூலை முதல், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கில், புதிய உத்தரவுகள் வந்தால், அதன் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.சி பள்ளிகளை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரம்

தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு:இதன்படி, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 105 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விரைவில் ஆய்வு நடக்கிறது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், அரசு பள்ளிகள், மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடப் பள்ளிகள் என, பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிக்க தமிழக கல்வித்துறையில் தனியாக ஒரு பிரிவு இல்லை. அனுமதி:தாங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், தமிழக கல்வித்துறை கண் காணிக்க முடி யாது என்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூறி வந்தன.

ஆனால், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு, கல்விக் கட்டணம் போன்ற வற்றை, மாநில அரசே கண்காணிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும், நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, இதுகுறித்து விசாரித்து, அனைத்து சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் அதிகாரத்தை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

'நோட்டீஸ்':இதனால், அங்கீகாரம் பெறாத சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. 105 பள்ளிகள் அங்கீகாரம் கோரி, பள்ளிக் கல்வித்துறையிடம் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் குறித்து, கல்வி அதிகாரி கள் மூலம், பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்து, அனுமதி வழங்குவது குறித்து கல்வித்துறை முடிவு செய்ய உள்ளது.

தொலைதூரக் கல்வியில் எம்.பில்,பி.ஹெச்.டி

யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து, யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு, வேதபிரகாஷ் கூறினார். தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற பட்டப்படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நான்கு ஆண்டுக்கு முன், யு.ஜ.சி., உறுதி அளித்திருந்தது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த, யு.ஜி.சி., தீவிரம் காட்டத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Friday, June 19, 2015

B.ed படிப்பு இரண்டு ஆண்டாகிறது

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

*பி.எட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி 40நாட்களாக இருந்தது

*இனி 20வாரங்களாக இருக்கும்.முதல் ஆண்டு 6வாரம்,இரண்டாம் ஆண்டு 14வாரம் கற்பித்தல் பயிற்சி இருக்கும்

*இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் பதிவெண் பெறாதோருக்கு சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவோருக்கு கருவூலத் துறை மூலம் பதிவெண் வழங்கப்படும். இந்த நிலையில், இதில் இணையாதவர்களுக்கும், திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோருக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளோர், அவர்களுக்கு பதிவெண் வழங்கப்படுவது குறித்த அறிக்கைகளை கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர், மாநில தரவு மைய ஆணையர் ஆகியோர் மாதத்துக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்

பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பொதுத்தேர்வுகளை, எவ்வித பிரச்னையும் இன்றி நடத்த, பல வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதையும் மீறி சில இடங்களில், தொழில்நுட்ப உதவி மூலம், முறைகேடுகள் நடந்து விடுகின்றன. இனி வரும் காலங்களில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Thursday, June 18, 2015

குரூப் 2 தேர்வு 6 லட்சத்து 20ஆயிரம்.பேர் எழுதுகிறார்கள்

குரூப்-2 முதல் நிலை தேர்வு ஜூலை 26-ந்தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வை 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். குரூப்-2 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஜூலை 26-ந்தேதி காலை நேர்முகத்தேர்வுக்கு உட்பட்ட குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு 1,241 காலிப்பணிடங்களுக்காக நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ஷ்ஷ்ஷ்.௴ஸீஜீ௳நீ.ரீஷீஸ்.வீஸீ -இல் வெளியிடப்பட்டுள்ளது. சரிபார்க்கலாம் தொகுதி-2-க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி, அதன் விவரம் மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் (செலான்) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான நீஷீஸீ௴ணீநீ௴௴ஸீஜீ௳நீ@ரீனீணீவீறீ.நீஷீனீ க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

விண்ணப்பதாரரின் பெயர்: தொகுதி-2-க்கான விண்ணப்பப்பதிவு எண் விண்ணப்ப அல்லது தேர்வுக் கட்டணம் (ரூபாய்) செலுத்திய இடம்: அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி, அல்லது வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி ஹால் டிக்கெட் மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமேயாகும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

24ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் இயங்கி வரும் 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வரும் 24ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் இயங்கி வருகின்றன.

இதில் 40 ஆயிரம் அதிகாரிகளும், 25 ஆயிரம் ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்த வங்கிகளின் மூலதனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வசம் உள்ளதால், இதனை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிகளில் அதன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற்று, 5 வங்கிகளையும் சுயமாக இயங்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதில் 25 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் தற்போது லாபகரமாக இயங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில், இந்த 5 வங்கிகளையும் அதனுடன் இணைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக டில்லியில் தலைமை தொழிலாளர் நல ஆணையருடன் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

ப்ளஸ் 1 வகுப்புகளுக்கு ப்ரிட்ஜ்.கோர்ஸ்

பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.இதற்கு தயாராகும் வகையில், இடைநிலைக் கல்விக்கும், மேல்நிலைக் கல்விக்கும் உள்ள பாடத்திட்ட வித்தியாசங்கள் மற்றும் பழைய பாடத்திட்ட திருப்புதல் அடங்கிய, பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள் நடத்த அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.'பிரிட்ஜ் கோர்ஸ் முடிவதற்குள், பிளஸ் 1 வகுப்புகளுக்கான அனைத்து மொழிப்பாடம் மற்றும் பாடப் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

Wednesday, June 17, 2015

இன் ஜினியரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பஸ்களில் சலுகை

தமிழகத்தில் உள்ள 538 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 658 இடங்களுக்கு, 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. வரும் 19ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 28ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்.

கவுன்சலிங் கடிதத்துடன் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். உரிய தகுதியிருந்தும் கடிதம் கிடைக்காதவர்கள் கலந்தாய்வு தொடங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு பல்கலைக்கழகத்திற்கு வந்தால் அவர்களுக்கு உரிய அழைப்பு கடிதம் வழங்கப்படும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும். இதற்காக மாணவர்கள், தங்களின் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக வந்திருக்கும் அழைப்பு கடிதத்தை (ஒரிஜினல்) அரசு பேருந்து நடத்துனரிடம் காட்ட வேண்டும். அப்படி காட்டும் பட்சத்தில் நடத்துனர் மாணவருக்கும் அவருடன் வரும் ஒருவருக்கும் பயண கட்டணத்தில் பாதி சலுகை அளிப்பார். அதாவது, இருவரும் பயண கட்டணத்தின் பாதியை கட்டணமாக செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்விற்காக வரும் மாணவர்களில், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.1000மும், மற்ற பிரிவினர் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக கட்டி அதற்காக ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.

இதனை கலந்தாயிவின் போது இணைக்க வேண்டும். இந்த கட்டணம், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின்னர் கல்வி கட்டணம் கட்டும் போது சமன் செய்து கொள்ளப்படும். இன்ஜினியிரிங் மாணவர்கள் சேர்க்கையினை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து கல்லூரிகளின் நிலை, சீட்டுகளின் இருக்கையை தெரிந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட டிவிக்கள் பொருத்தப்பட்ட டிஸ்பிளே ஹால் அமைக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு தேவையான கேன்டீன் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்பிற்காக போலீஸ் பூத், தீயணைப்பு வண்டி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு ஒரு நாளைக்கு 8 பிரிவுகளாக நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 500 முதல் 700 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பிரிவிற்கு கலந்தாய்வு முடிந்தவுடன் கல்லூரிகளில் சீட் இருப்பு, நிரம்பிய இடங்கள், துறைவாரியாக, கல்லூரி வாரியாகவும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். அதேபோல, கவுன்சலிங் நடைபெறம் அறை முழுவதும் ரகசிய கேமிராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். கவுன்சலிங் அரங்கில் செல்போன் பேச அனுமதி கிடையாது. இதேபோல, அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சாதாரண உடையில் போலீசார் இருப்பார்கள். இவர்கள் பல்கலைக்கழகத்தை தீவிரமாக கண்காணித்தபடி இருப்பார்கள். பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் உள்ளேயே யாரும் குறிப்பிட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அதபோல, தனியார் கல்லூரிகள் தொடர்பான துண்டு பிரசுரங்களும் இந்த பகுதிகளில் வழங்க கூடாது.

இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பிற மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் படித்திருந்தாலும், அவர்களுக்கு இன வாரியான இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது. அவர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்கள் “ஓசி” (ஓப்பன் காம்பட்டிஷன்) என்ற பிரிவின் அடிப்படையிலேயே எடுத்து கொள்ளப்படுவார்கள். அதன் அடிப்படையிலேேய அவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். அதேபோல, விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ் இணைக்காதவர்களும் ஓசி பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் கலந்தாய்வின் 2 நாட்களுக்கு முன்னர் தங்கள் ஜாதி சான்றிதளை ஒப்படைத்து உரிய சலுகைகளை பெறலாம்.

அனைத்தும் பார்கோட் மயம் பொறியியல் கலந்தாய்வு இந்தமுறை அனைத்திலும் பார்கோடை பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார்கோடை ஸ்கேன் செய்ததுமே அவர்களுக்கான அனைத்து தகவல்களும் கணிணியில் பதிவாகிவிடும்.

இதனால், ஒவ்வொரு முறையும் புதிதாக என்ட்ரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2 மணி நேரம் முன்பே வரவேண்டும் பொறியியல் கலந்தாய்விற்கு தகுதி பெறும் மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்தில், அவர்களுக்கு என்ன தேதியில், எந்த நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அந்த நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வரவேண்டும்.