இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 09, 2013

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்பட உள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது.

இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு 3 வரைபடம் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்புகளுக்கு மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 741 வரைபடங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய முடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு

மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம்(டிஸ்மிஸ்) செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பணி இடைநீக்கம் பணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த போதிலும் பள்ளி நிர்வாகம் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், ஐகோர்ட்டில் அப்பீல் செய்தேன். அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்த போது, 8.10.2012 அன்று என்னை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை தலைமை ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மீண்டும் பணி வழங்க உத்தரவு இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டப்படி 2 மாதத்துக்குள் மேல் உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய முடியாது. உரிய காரணத்தை தெரிவித்து பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்க அதிகாரம் உள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்கவில்லை.

8.10.2012 அன்று மனுதாரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்காததால் 8.12.2012 அன்றுடன் அவரது பணி இடைநீக்கம் முடிவு பெறுகிறது. எனவே, மனுதாரரை தலைமை ஆசிரியராக பணியாற்ற பள்ளி நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 9.12.2012 முதல் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.’’ இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

3-ம் பருவத்துக்கு 2.4 கோடி புத்தகங்கள்: 25-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும்

முப்பருவ முறையில் மூன்றாம் பருவத்துக்கான 2.4 கோடி புத்தகங்கள் டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் குறித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது: மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்க உள்ளன.

முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக புத்தகங்களை அச்சடிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுவரை 70 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு டிசம்பர் 25-க்குள் அனுப்பப்பட்டு விடும். தமிழகம் முழுவதும் 66 புத்தக விநியோக மையங்களும், பாடநூல் கழகத்துக்குச் சொந்தமாக 22 கிடங்குகளும் உள்ளன. இந்த இடங்களுக்கு அனைத்துப் புத்தகங்களும் நேரடியாக அனுப்பப்படும். அங்கிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல் இலவசமாக வினியோகம்

    வரும், 23ம் தேதி வரை, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின், தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள், இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள், இப்போதே நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பாட நூல் கழக செயலர், அன்பழகன் கூறியதாவது:

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக, 2.4 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 70 சதவீத புத்தகங்கள், மாவட்டங்களுக்கு, அனுப்பப்பட்டு விட்டன. 20ம் தேதிக்குள், 30 சதவீத புத்தகங்களும், மாவட்டங்களுக்கு சென்று விடும். எனவே, தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்த முதல் நாளன்றே, இலவச புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடவும், ஏற்பாடு செய்துவிட்டோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

50 கல்வி டிவி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் டிஷ் ஆன்டெனா

கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ் ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நிறுவப்படுகிறது. பொழுதுபோக்கு, டிவி சேனல்கள், பல்வேறு நிறுவனங்களின், டிஷ் ஆன்டெனாக்கள் மூலம் பார்க்க முடியும். முதல் முறையாக, முழுக்க முழுக்க கல்வி சேனல்களை மட்டும் வழங்கும், புதிய, டிஷ் ஆன்டெனா விரைவில் வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

டிஷ் ஆன்டெனா விலை, 1,500 ரூபாய். இதன் மூலம், 50 கல்வி சேனல்கள் தெரியும். மேல்நிலை கல்வி, உயர்கல்வி, மருத்துவ கல்வி, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போட்டித் தேர்வுகள் போன்ற அனைத்து தகவல்களை, இந்த சேனல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் முக்கிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும். மாணவர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம், பேராசிரியர்களுடன் கலந்துரையாட வசதியுண்டு. இந்த சேனல்கள் சேவைக்காக, இஸ்ரோ நிறுவனம், இரண்டு ஜி-சாட்-8 வகை டிரான்ஸ்பான்டர்களை வழங்கியுள்ளது.

இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் தடையின்மை சான்றுக்காக, இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சான்று கிடைத்ததும், மே மாதம், 1ம் தேதியில் இருந்து, டிஷ் ஆன்டெனாக்கள் விற்பனைக்கு வரும்.

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற டிச., 15 முதல் அடையாள அட்டை கட்டாயமாகிறது

. யுனைடெட் இந்தியா நிறுவனம் : தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மக்கள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை, அரசு செலுத்தி விடும். இதனால், ஏழை, எளிய மக்கள், தனியார் மருத்துவமனைகளிலும், காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடிகிறது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது;

இது முழுமை அடையவில்லை. இதனால், அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அடையாள அட்டை இல்லாவிட்டாலும், ரேஷன் கார்டு மற்றும் வருமானச் சான்று கொடுத்து, உரிய சிகிச்சை பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த நடைமுறையை, காப்பீட்டு நிறுவனம் கைவிடுகிறது. டிச., 15ம் தேதி முதல், அரசின் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை இல்லாவிட்டால், சிகிச்சை பெற முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை அடையாள அட்டை பெறாதோர், சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என, தெரிகிறது. கலெக்டர் அலுவலகம் : இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரும்பான்மையானோருக்கு, மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை, காப்பீடு அட்டை பெறாதோர், கலெக்டர் அலுவலகத்தில், இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சென்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். டிச., 15க்குப்பின், அடையாள அட்டை இல்லாவிட்டால், இத்திட்டத்தில் சிகிச்சை பெற இயலாது. யாருக்கும் சிகிச்சை தரக்கூடாது என்பது நோக்கமல்ல; எல்லாரும் மருத்துக் காப்பீட்டு அட்டையை முறையாக பெற வேண்டும்; பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார். நீட்டிக்கப்படுமா? : தமிழகத்தில், பொதுமக்கள் இன்னும் முழுமையாக மருத்துவக் காப்பீடு அட்டை பெறாத நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு பொதுநல அமைப்புக்களும் வலியுறுத்தி உள்ளன.

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச.,10, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,12 பிளஸ்2 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வு ரிசல்ட் அடிப்படையில், அரசு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விடைத்தாளில் உள்ள குறைகளை மாணவர்களிடம் சுட்டிகாட்ட வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை தரம் பிரித்து, பாடவாரியாக சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்."புளு பிரின்ட்' படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் ஐந்து, ஐந்து வினாக்களாக பிரித்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். வரலாறு, புவியியல் பாடங்களுக்கு வரைப்பட பயிற்சி அளிக்க வேண்டும்.மாணவர்களை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும், பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். மந்தமான மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.

Sunday, December 08, 2013

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு

   பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விவரங்களை, தேர்வுத் துறை, ஏற்கனவே வழங்கிய படிவத்தின் மூலம், தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். இந்த விவரங்களை பெறும் பணியை, 10ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது

. இதையடுத்து, அந்த விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். ஒரே நேரத்தில், அனைத்து மாவட்ட விவரங்களும், அப்லோட் செய்ய முடியாது என்பதால், ஒரு வாரத்திற்கு, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் பதிய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தேதியில், இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது

. ஜன., 10ம் தேதிக்குள், இந்த பணி முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., இறுதியில், செய்முறை தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, பதிவு எண்கள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி, முதல் வாரத்திலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில் இருந்தும், செய்முறை தேர்வு நடக்கிறது.

Tamil Novels &magazines free download

Saturday, December 07, 2013

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள NTSE -NOVEMBER 2013 தேர்வு விடைகள்

நாட்டில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை:ராஜூ

நாட்டில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். தரமான கல்வியை அளிப்பதற்காக இந்த காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விபரத்திற்கு பதிலளித்த ராஜூ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Friday, December 06, 2013

நெல்சன் மண்டேலா மரணம் 5 நாட்கள் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் தமிழக அரசு அறிவிப்பு

  தமிழ்நாடு பொதுத்துறை முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் ஆர்.மண்டேலா கடந்த 5–ந் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டிசம்பர் 6–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில், தமிழகம் முழுவதும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இதுசம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு: சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கலந்தாய்வ

குரூப் 4 தேர்வின் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தொடங்குகிறது. மூன்று நாள்கள் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி. எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2007-08 மற்றும் 2012-13 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப் 4 தொகுதியில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக கலந்தாய்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் நிரப்பப்படாத 449 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகிலுள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பதிவெண்கள் மற்றும் அவர்கள் பங்கேற்க வேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன என்று தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன் லைனில் பதிவு

   பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன் லைனில் பதிவு செய்யப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2014 மார்ச், 3ல் துவங்குகிறது. இந்தத் தேர்வை எழுதும், மாணவர்களின் பிறந்த தேதி, தமிழ், ஆங்கிலத்தில் பெயர் எழுதும் முறை, பெற்றோர் பெயர், அங்க அடையாளங்கள், உயரம், ரத்த வகை உட்பட, 20க்கும் மேற்பட்ட விவரங்கள், பள்ளிகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை, மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படத்துடன், கம்ப்யூட்டரில் பதியும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. மாணவர்கள் தங்கள் பெயரில், எழுத்து திருத்தம் உட்பட, வேறு ஏதாவது மாற்றம் இருந்தால், அவற்றை, வரும், 9ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்கள் அடங்கிய பட்டியல், வரும், 10ம் தேதி, ஆன் லைனில் ஏற்றப்படுகிறது. இதற்கு பின், எவ்வித திருத்தமும் செய்ய இயலாது.

English Medium proposal form 2014-15

Thursday, December 05, 2013

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

ஒருவர் படித்து பட்டம் பெற்றபின் அப்பட்டம் (Convocation /Degree Certificate) அப்பல்கலைக்கழகத்தால் தான் வழங்கியது என்றும் அப்பல்கலைக்கழகம் மூலம் பெறும் சான்றே” உண்மைத்தன்மை” (Genuous) எனப்படும், (போலியாக படித்தது போன்று பட்டம் பெறுவதை தடுக்கவே இந்த நடைமுறை)

* இந்த தபாலை தலைமையாசிரியர் வழியாக, AEEO மூலம் தான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப்பெற வேண்டும்.

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350.

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

-தோழமையுடன்,
Teachers Friend Devarajan,
Thanjavur.

டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை, ஜன., 5க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு, அக்டோபரில், இரண்டாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த மையம் சார்ந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று, ஜன., 5க்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

ப்ளஸ் டூ தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 26: தமிழ் முதல் தாள்

மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4: கணக்கு

ஏப்ரல் 7: அறிவியல்

ஏப்ரல் 9: சமூக அறிவியல்

ப்ளஸ் டூ தேர்வு அட்டவணை

மார்ச் 3: தமிழ் முதல் தாள்

மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 10: இயற்பியல், பொருளியல்

மார்ச் 13: வணிகவியல், புவியியல், மனையியல்

மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்

மார்ச் 17: வேதியியல், கணக்குப் பதிவியல்

மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்

மார்ச் 25: கணினி அறிவியல், உயிரி வேதியியல்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,.

இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் பாட வாரியான தேர்வு நாட்கள் குறித்து சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS தேர்வில்.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரம் மற்றும் படிவம்

Wednesday, December 04, 2013

2013-14 School Diary&Instractions

TNPSC Group II answer key

இனி இல்லை தனித்தேர்வு மையம

் பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, இனி தனி தேர்வு மையம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு , தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்வு மையத்தில் ஒரு ஹாலில் அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நடைமுறையில் வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஹாலில் 20 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, பள்ளிகளில் பயிலாதோர் தனித்தேர்வர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது. வரும் பொதுத்தேர்வில் இவர்களுக்கென தனி தேர்வு மையம் கிடையாது. பள்ளி மாணவர்களின் தேர்வு மையத்தில் இடையே, இடையே தனித்தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கி தேர்வெழுதவேண்டும், என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ""வீட்டில் படித்து பொதுத்தேர்வு எழுதுவோருக்கென தனிப்பாடம் கிடையாது. தனித்தேர்வர்கள் என்ற மனநிலையை போக்க, பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒரே ஹாலில் தேர்வெழுதும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் பின்பற்றப்படும்,'' என்றார்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள

்* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
நன்றி : தேவராஜன், தஞ்சாவூர்