இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 21, 2013

அரசு பள்ளி மாணவர் 6,700 பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது, 9ம் வகுப்பு பயிலும், 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடந்தது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்றனர்.

"இதன் முடிவு, 23ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, www.tndge.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார். இந்த தேர்வில், 6,700 பேர், தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாணவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 1,500 ரூபாய் வீதம், பிளஸ் 2 வரை, உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. தேர்வு நடந்து, ஒரு ஆண்டு முடியும் நிலை உள்ளது என்றாலும், இந்த ஆண்டிற்கான உதவித்தொகை, சம்பந்தபட்ட மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

   மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும். காலை, 10:00 மணி முதல், 10:10 வரையான 10 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க வழங்கப்படும்.

அடுத்த, 5 நிமிடம், விடைத்தாளில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15ல் துவங்கும். இந்த 15 நிமிடங்கள், இரு தேர்வுகளுக்கும் பொருந்தும். எனினும், பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரம் என்பதால், 10:15க்கு துவங்கி, 1:15க்கு முடிவடையும். 10ம் வகுப்பு தேர்வு, 10:15க்கு துவங்கி, 12:45க்கு முடியும். 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு

    அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல் 2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதேபோல்,தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2013 நவ.1 வரை காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 2013 நவ.,1 முதல் 2015 மார்ச் 14 வரை, ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலி பணியிட பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, November 20, 2013

ஹலோ - அமைதியின் ஆரம்பம் : இன்று சர்வதேச ஹலோ தினம்-

   எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே. இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.

சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது

. தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என, சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து, டி.இ.டி., தேர்ச்சிக்கான முடிவு, மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும், தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என, கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும். தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்ப இயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

தேர்வறையில் 20 பேர் மட்டுமே

்: தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். பிளஸ்2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முன்னேற்பாடு தொடர்பான 4 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. தேர்வுத்துறை இணை இயக்குனர் பேசிதாவது:

தேர்வறைகள் 20க்கு20 அடி அளவுள்ள அறையாகவும், ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கடைசி அறையில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவாக இருக்கலாம். குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதிகள், சுற்றுச்சுவர் இருக்க வேண்டும் பெஞ்சுகளை மற்ற பள்ளிகளில் இருந்து கொண்டு வர கூடாது. வசதி இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மையம் அனுமதிக்க கூடாது, என்றார்.

டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

- சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்வினி ராணா தெரிவித்தார்.

வங்கித்துறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அவர் கூறினார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பள உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றக்கோரியும், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

04.12.2013 (புதன்) - டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம மாவட்டத் தலைமையேற்போர் : ்.

I). தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i) சிவகங்கை ii) தர்மபுரி iii) இராமநாதபுரம் iv) பெரம்பலூர்
v) திருவள்ளூர் .

II). தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-
i) நாமக்கல் ii) ஈரோடு iii) திருப்பூர் iv) மதுரை v).சென்னை ஆ

III)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
i). நாகை ii)திருவாரூர் iii) கிருஷ்ணகிரி iv) திருநெல்வேலி

IV) தமிழக ஆசிரியர் கூட்டணி-
i) அரியலூர் ii) திண்டுக்கல் iii) சேலம் iv) நீலகிரி

V) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i) தேனி ii) காஞ்சிபுரம் iii) விருதுநகர் iv) தூத்துக்குடி v) கன்னியாகுமரி

VI) தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i)தஞ்சாவூர் ii) திருச்சி iii) புதுக்கோட்டை iv) கரூர்

VII)தமிழ்நாடு தொடக்க ந.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
i) திருவண்ணாமலை ii) வேலூர் iii) விழுப்புரம் iv)கடலூர்

கோரிக்கைகள் :
1. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதிய விகிதம் - 01.01.2006 முதல் வழங்கிட வேண்டும்.

2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்திட வேண்டும்.

3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.

4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்

(ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

5. ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்கக் கல்வியில் தமிழ்வழி கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.

7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு -TNPTF

பள்ளிக் கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும

்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது. அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது.

மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

TNPSC Group II Hall ticket

Tuesday, November 19, 2013

டி.என்.பி.எஸ்.சி.:30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு விரைவில்.

30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வு வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. போட்டிக்கு காரணம் இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், அதேபோல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேருபவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றுவிடலாம்.

யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வுசெய்யப்படும் அனைவருக்கும் சொந்த மாநிலத்திலேயே பணி (ஹோம் ஸ்டேட் கேடர்) கிடைத்துவிடுவதில்லை. ஆனால், குரூப்-1 தேர்வு மூலமாக இந்த பணிகளுக்கு வருபவர்கள் தமிழ்நாட்டிலேயே பணியை தொடரலாம். இதனால், குரூப்-1 தேர்வு எழுவதுவதற்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் பலத்த போட்டியிருக்கும். யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு கைகொடுப்பது குரூப்-1 தேர்வுதான். 100 காலியிடங்கள் குரூப்-1 பதவிகளில் 2012-ம் ஆண்டுக்கான 25 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்கான 100 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த காலியிடங்களில், 33 துணை ஆட்சியர், 33 துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) பதவியில் மட்டும் காலியிடம் ஏதும் இல்லை. வணிகவரி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட இதர பணிகளில் காலியிடங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் பணியாளர் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

IGNOU B.ed decenber 2013 exam Hall Ticket

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் என்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக 14 வயது வரை உள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதி தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்றும் 2009–ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதை தமிழக அரசு கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது. நியமனம் செல்லாது அதன்படி 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 11–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தால் அந்த நியமனம் செல்லாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளதால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியில் தான் சேருகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர யாரும் முன்வருவதில்லை. நீடிக்கக்கூடாது இந்த நிலையில் 2011–ம் ஆண்டு நவம்பர் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நியமனம் செல்லத்தக்கது அல்ல.

இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கலாமா என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. ஆனால் அதற்கு வழி வகுக்காமல் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி செல்லத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற முடிவை ஏற்று பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று கூறி உள்ளது.

அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள் By

அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட 20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 14-பொங்கல்-மிலாது நபி

ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16-உழவர் திருநாள்

ஜனவரி 26-குடியரசு தினம்

மார்ச் 31-தெலுங்கு வருடப் பிறப்பு.

ஏப்ரல் 13-மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு

ஏப்ரல் 18-புனித வெள்ளி

மே 1- மே தினம்

ஜூலை 29-ரம்ஜான்

ஆகஸ்ட் 15-சுதந்திர தினம்

ஆகஸ்ட் 17-கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 29-விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி-ஆயுத பூஜை

அக்டோபர் 3-விஜய தசமி

அக்டோபர் 5-பக்ரீத்

அக்டோபர் 22- தீபாவளி

நவம்பர் 4- மொஹரம்

டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்.

வருங்காலத்திற்கு' வந்த சோதனை : இன்று உலக குழந்தைகள் தினம்

  ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெப் அமைப்பு, ஆண்டுதோறும் நவ., 20ம் தேதியை, உலக கு ழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றது. உலகில் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் பொதுநிலைப்பாட்டை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சுரண்டல் மற்றும் பாகுபாட்டை நீக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் அனைத்து வன்முறைக்கும் எளிதில் ஆளாகுவோர் குழந்தைகள் தான். அவர்களுக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளிகளாக, குறைந்த சம்பளத்தில் கடின வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். தெருக்களில் வாழும் அவல நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். பல நாடுகளில், குழந்தைகளிடையே ஆயுத கலாச்சாரம் பரவி வருகிறது. உள்நாட்டு போர், வன்முறை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக, குழந்தைகளின் உடல் மற்றும் உள்ளம் பாதிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல், பள்ளிகள் மீதான தாக்குதல், கொடுமைப்படுத்தல், கொலை செய்தல் போன்ற தாக்குதல் பெருகி வருவது வேதனை அளிக்கும் விஷயம்.குழந்தைகள் நாட்டின் கண்கள்.

குழந்தைகளின் மீது செலுத்தப்படும் அநீதி, எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதி. அது வருங்கால உலகை நிச்சயம் பாதிக்கும்.

மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

  இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. இந்தியர்களின் ஆங்கில தேவையை அறிந்து, அதற்கேற்ப, ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இந்தியாவின் பெரும்பகுதி மக்களிடம், ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல, மொபைல் போன் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்துகிறோம். "மொபைலில் ஆங்கிலம்' என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும், தொலைபேசி மூலம், ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதன்மூலம் ஆங்கில உரையாடலை அறியலாம்.

இத்தி"ட்டத்தில், ஆரம்ப நிலை, இடைநிலை, முன்னேறிய நிலை என, மூன்று நிலைகள் உள்ளன. மொபைல் மூலம், ஆங்கிலம் கற்றோரின் தகுதியை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிந்து, அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கிறது. இதற்கு, "அப்ளைடு லேப், ஏ.ஏ. எஜுடெக்' ஆகிய நிறுவனங்களின் மென்பொருள் உதவுகிறது. இவ்வாறு, மார்ட்டின் டேவிட்சன் கூறினார்.

அப்ளைடு மொபைல் லேப் தலைமை நிர்வாக அதிகாரி, மிரிகங்க திரிபாதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர், விழாவில் கலந்து கொண்டனர்.

மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்

   ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட, ஒரே கேள்விக்கு, மாறுபட்ட விடைகள் இடம் பெற்றிருந்ததால், தேர்வர்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர். வணிகவியல் தேர்வு, 'டி' பிரிவு வினாத்தாளிலும், இதுபோன்ற குழப்பம் நீடித்தது. இதுதவிர, சமீபத்தில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வுகளிலும், உத்தேச, 'கீ ஆன்சரில்' இடம் பெற்ற தவறுகள் திருத்தப்படாமல், முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதனால், 88 மதிப்பெண் பெற்ற பலர், சரியான விடையளித்தும், மதிப்பெண் கிடைக்காததால் தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு எழுதியோர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக, டி.ஆர்.பி., இணை இயக்குனர்கள், இயக்குனர்கள் என, அடுத்தடுத்து மதுரை ஐகோர்ட்டில் ஆஜராயினர். வினாத்தாள் தயாரிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, டி.ஆர்.பி., தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது, டி.ஆர்.பி.,க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்குகள், உடனுக்குடன் டி.ஆர்.பி., கவனத்திற்கு செல்லாததே, அபராதம் வரை சென்றது.

இதன் விளைவாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கண்காணித்து, அவற்றின் விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க, மதுரையில் புதிய கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., யில், மொத்தம், ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், ஒரு பணியிடம், மதுரைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பில், மதுரை கிழக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர், முத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.